<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d7768707\x26blogName\x3d%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://anuragam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://anuragam.blogspot.com/\x26vt\x3d-3077545600800790071', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>


அனுராகம்

கதையும் கவிதையும் எழுத்தில் வனைந்த இன்னும் சிலதும் 



PDF

kanyakumari

கன்னியாகுமரி

8:28:00 PM

தனிப்பதிவு | மதிப்பிடுக: - தமிழ்மணம் | * |


*


Anonymous Anonymous கூறுவது...

Nice blog, especially refreshing to see content that appeals to the Tamil audience. We would like to introduce you to a quick and easy method of typing Tamil on the Web.

You can try it live on our website, in Tamil!

http://www.lipikaar.com

Download Lipikaar FREE for using it with your site.

No learning required. Start typing complicated words a just a few seconds.

> No keyboard stickers, no pop-up windows.
> No clumsy key strokes, no struggling with English spellings.

Supports 14 other languages!

 


Blogger Crazy King கூறுவது...

Find the software you're looking for at latestfiles.blogspot.com, the most comprehensive source for free software downloads on the Web. Includes audio programs, utilities, Internet and desktop software, applications for developers, downloads for small business users, and more.

http://latestfiles.blogspot.com/

Fullversion Downloads

*_*-*_*-*_-*_*-*_*_*-*_*-*_-*_*-*_**_*-*_*

A New Blog with lots of computer related tips,tricks,hacks,tweaks and tutorials with posts on daily basis with RSS Feed.

http://supertrickz.blogspot.com/

Computer Hacks

*_*-*_*-*_-*_*-*_*_*-*_*-*_-*_*-*_**_*-*_*

Blogger widgets,Templates,Tips,Tricks,Hacks,Helps and more...

http://bloggeralerts.blogspot.com/

Blogger widgets Templates

*_*-*_*-*_-*_*-*_*_*-*_*-*_-*_*-*_**_*-*_*

Funny pictures,Videos,Text Messages,Jokes,Riddles,Facts,Funny Movie Review,Ringtones.

http://funfury.blogspot.com/

Funny Blog

*_*-*_*-*_-*_*-*_*_*-*_*-*_-*_*-*_**_*-*_*

 


Blogger www.thalaivan.com கூறுவது...

வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com

 


Blogger pathaikal கூறுவது...

உங்கள் தளத்துக்கு இணைப்பு கொடுக்கலாம்

உங்கள் பதிவுகளை இங்கே இடுவதன் மூலம் உங்களை தளம்,blogspot ஆகியவற்றை பிரபல்யப் படுத்துங்கள் .2 வாரத்துக்கு
http://www.thuruvi.com/

 


Blogger குறையொன்றுமில்லை. கூறுவது...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம்
கிடைக்கும் போது பாருங்கோ.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_9552.html

 


Blogger Sadhu கூறுவது...

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

 

Post a Comment

மறுமொழி இடுக!

PDF

சக்கரவர்த்தி-3

மாலை மயங்கும் நேரம் அவர்கள் மறுபடியும் சேர்ந்தார்கள்.

பெரியவர் கதையை ஆரம்பித்தார்.

"எனக்க இளவட்டப் பிராயத்தில நானும் நல்ல வாட்டசாட்டமா இருந்தேன். அப்பல்லாம் எதுக்கும், யாருக்கும் பயப்படுற சோலி கெடையாதும். எதுக்கும் துணிஞ்ச கை தான். ஊருல என்னம் பிரச்சினையானாலும் மின்ன நிப்பம். எவனையும் துணிஞ்சி அடிப்பம்.

அப்பத்தான் அக்கரையில இருந்து ஒரு பய இங்கத்த ஒரு பொண்ணப் பாக்க நெதம் ராத்திரி வாறதா தகவல் கெடச்சி. நாங்க நாலஞ்சி பேரு ஆருக்கும் தெரியாம ராத்திரி காவல் இருந்தம்.

அவம் ஆத்தக்கடந்து கரையேறினதும் சுத்தி வளச்சி அடிச்சோம். அவன் அத எதிர்பாக்காதனால கீழ விழுந்து எழிச்சி நின்னான். அதுக்குப் பெறகு ஒரு கறங்கு கறங்குனான். அதோட நானும் கூட உள்ள ரெண்டு பேரும் தூரப்போய் விழுந்தோம். திரும்ப நாங்க எழிச்சி வாறதுக்குள்ள அவன் வேகமா ஓடிப்போயிற்றான். எங்களுக்கு ஒடம்பு வலி தீர நாலஞ்சு நாளாச்சி.

ஒரு விசயம் எங்களுக்குப் பிடிபட்டுதுது. அவன் வர்மக்கலை அறிஞ்சவன். அதான் எங்கள மூணு பேரயும் ஒருசேர அடிச்சிட்டான். எங்களுக்கும் வேகம் வந்து அடிமொற படிக்க ஆசானத் தேடி அலைஞ்சோம்.

கடசீல எங்களுக்கும் ஒரு ஆசான் கிட்டுனாரு. அவரு ஆசான் மட்டுமில்ல. பெரிய மந்திரவாதி. மந்திரவாதமுஞ் செய்வாரு. செய்வினை, ஏவல் எடுப்பாரு. அவருக்கு அடிமொற அறுபத்திநாலுந் தெரியும். வர்மமும் களரியும் அத்துப்படி.
நாங்க போய்க் கேட்டதும் அவரு சம்மதிச்சிடல்லே. பெறவு பலநாள் நடையா நடந்து கடசீல அவரு மனசு இளகி சேர்த்துக் கிட்டாரு. நாங்க மூணுபேரு அடிவேல படிக்கச் சேந்தாலும் அவருக்க அடி பொறுக்காத மிச்ச ரெண்டுபேரும் ரெண்டு கிழமையில நிறுத்திடடானுவ. நான் மட்டும் தொடர போய் அவருகிட்ட வர்மமும் களரியும் படிச்சேன்.

அவருக்கும் எம்மேல ரொம்பப் பிரியம் வந்திட்டுது. அவருக்க மந்திரவாதங்களப் பத்தியும் எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் சொல்லித் தந்தாரு.

அவரு ஒத்தக் கட்ட. தனிமையா வாழ்ந்தாரு. "ஆசான் ஏன் கல்யணம் கட்டிக் கிடலை"ன்னு ஒரு நாள் நல்ல மனதையில இருக்கும்ப கேட்டேன். அப்பத்தான் அவரு ஒரு பயங்கரமான கதையச் சொன்னாரு.

(கதை வளரும்)

10:36:00 AM

தனிப்பதிவு | மதிப்பிடுக: - தமிழ்மணம் | * |


*


Anonymous thamilmahan கூறுவது...

ஆக்கம் நன்று

 


Anonymous tamil web library கூறுவது...

nice blog

visit my blog

tamil web library

 

Post a Comment

மறுமொழி இடுக!

PDF

சக்கரவர்த்தி-2

"என்ன வேய் சொல்லுதீரு? வல்லவனும் குடிச்சிட்டு வந்துருப்பாம். அவனுக்க பணத்த அடிச்சிட்டு தல்லுமுள்ளாயிருக்கும். எவனும் வசக்கேடா வச்சதில அடிபட்டு விழுந்திருப்பான். அல்லாத லெச்சியுமில்ல ஒண்ணுமில்ல."

"இல்ல ஓய்! அப்பிடி இல்ல. இது லெச்சி தான். இதுக்கு மின்னயும் இது போல ரெண்டு பேரு செத்துக் கிடந்தினும். அதும் ரெத்தம் கக்கித்தான் கெடந்தினும். இதும் பாரும் வாயில ரெத்தம்."

"வாயில ரெத்தம்னா லெச்சியா? என்ன ஓய்? இந்த இருவதாம் நூற்றாண்டில வந்து இப்பிடி மூட நம்பிக்கைல பேசுதீரு."

"எலே எளவட்டப் பயலுவளா.. இருவதாம் நூற்றாண்டில லெச்சி வராதா? லெச்சிக்க சக்திய அறியாத பேசாதிய கேட்டியளா?" என்றார் செல்வராசுக்கு உதவிக்கு வந்த பெரியவர் செல்லப்பன். பனையேறி செல்லப்பன் என்றால்தான் வட்டாரத்தில் எல்லாருக்கும் தெரியும்.

"அம்மாச்சா..நீரு லெச்சிய கண்டிருக்கீரா."

"கண்டிருக்கேனா? அது கூடப் பேசிட்டே வந்திருக்கேன்." என்றார் பெரியவர்.

இளவட்டங்களுக்கு ஏதோ குஷி தோன்றியது. 'இனி சந்தைக்கும் போக ஏலாது. பெரியவரை வளைத்துப் போட்டால் கொஞ்சம் சமயம் போகும்' என்று தோன்றியது.

இதற்குள் போலீஸ் வந்து விட செல்வராசுவை அழைத்தார்கள். சவத்தை முதலில் பார்த்தவன் அவனல்லவா?

சம்பிரதாயங்கள் முடிந்து கொஞ்ச நேரத்தில் பிரேதத்தை போலீசார் எடுத்துப் போய் விட அங்கே கூட்டம் கலைந்தது.

இளவட்டங்களின் தூண்டுதலால் ஏதோ கதை பேச ஆரம்பித்த பெரியவர் பனையேறி செல்லப்பன் திடீரென நினைவு வந்தவராக "தம்பியளா..இப்பம் ஒரு சோலியாப் போறேன். வையிட்டு அந்தக் கலுங்குக்கு வாருங்க. லெச்சிக்க கதைய வெவரமாச் சொல்றேன்." என்றார்.

அவர்கள் கலைந்தார்கள்.
(வளரும்)

1:08:00 AM

தனிப்பதிவு | மதிப்பிடுக: - தமிழ்மணம் | * |


*


Anonymous Anonymous கூறுவது...

அன்புடையீர்,

வணக்கம்.

மேடைத் தமிழுக்கு மெருகூட்டும் அக்கறையுடன் சங்கம்4 என்ற பெயரில் 21 நாள் தமிழ் விழா நடத்துகிறோம். பல்துறைகளும் பெருமாற்றங்கள் கண்டு வரும் நவீன யுகத்தின் தன்மைகளையும் செல்நெறிகளையும் உள்வாங்கி அமைவதாலேயே சங்கம்4 என்ற பெயர் சூடல். பங்கேற்கும் உரையாளர்கள் துறைசார் தகுதி கொண்ட அறிவாளர்கள். அரசியல் – சாதி – சமயம் கடந்த உரையாடல் களமாகவும் இதனை கட்டமைக்கிறோம். குவலயத் தமிழர்கள் இணைய மேடையில் இணைவார்கள். ஆங்கில மொழியில் புகழ்பெற்று நிலைத்துவிட்ட TEDTALKSTED TALKS போல தமிழில் sangamசங்கம்4 பரிமளிக்க வேண்டும்.
“நமக்கு இன்று தேவை மாற்றம், அது நம்மால் முடியும்” என்றுரைத்து ஆக்கப்பூர்வமான நற்பணிகளை அமைதியாகச் செய்து வரும் “நாம்” அமைப்பு சங்கம்4 அரங்கினை அமைக்கிறது. தமிழ் மையம் அமைப்பு துணை நிற்கிறது.
அறிவுத்தேடல், தர்க்க விசாரணை, இலக்கிய தரிசனம், கட்டுக்கொப்பின் அழகியல் என மேடைத்தமிழின் உயர்ந்த மரபுகளை மீண்டும் தேடுகிற சிறியதோர் இச்சீரிய முயற்சியில் இணைந்திட உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இப்படிக்கு,
“நாம்” அமைப்பு.
“தமிழ் மையம்” அமைப்பு

https://www.facebook.com/sangamfour

 

Post a Comment

மறுமொழி இடுக!

PDF

சக்கரவர்த்தி

(கதை ஒன்று கேட்போம்)
பகுதி-1

அந்த விடிகாலை வேளையில் தலையில் குலைக்கட்டும் தூக்கிக் கொண்டு குளத்தங்கரை ஒத்தையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தான் செல்வராசு. ராத்திரி உள்ள போன சாராய கிறக்கத்துல எழுந்திரிக்க கொஞ்சம் பிந்திட்டுது. எப்பவும் இதைவிட அதிசீக்கிரமே அவன் சந்தைக்கிப் போய்விடுவான் கருக்கலுக்குள் போய்ச் சேர்ந்தால்தான் வெயிலுக்குமின்ன வீடு திரும்ப முடியும். அவன் வந்துதான் வெளையில நட்ட மலக்கறியளுக்கு வெள்ளம் கோரணும்.

தூரத்தில் பொழுது விடிவதற்கான அறிகுறி கிழக்கு வானத்தில் வெளிச்சப்பட்டது. அது கண்டதும் நடைவெளி கூட்டி விரைசலாக நடந்தான். ஓட்டநடையின் வேகத்தில் எதன்மீதோ தடுக்கிக் கொண்டு விழ இருந்தான். குலைக்கட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு தடுமாறி பின் நிலைத்து நின்று தடுக்கியது எது என்று பார்த்தான்.

பார்த்ததும் தலையோடு குலையைப் பிடித்திருந்த கை நழுவியது. குலை வழுக்கி குளத்தில் விழுந்தது. அவன் தரையில் கிடந்த உருவத்தைக் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் பார்த்து நின்றான்.

சந்தைக்குப் போகும் இன்னும் சிலர் பேசிக்கொண்டே பின்னோடு வரும் சப்தம் கேட்டதும் தான் செல்வராசு நடுக்கத்தினின்று நழுவினான்.

"ஆருல அது செல்ராசா? இங்க என்ன செய்யே?" கீரைக்கட்டு தூக்கி வந்த இளையபெருமாள் கேட்டான். "பிரேதம்!...பிரேதம் கெடக்கு...." செல்வராசு குளறியது கேட்டதும் இளையபெருமாளோடு வந்த இன்னுமிருவர் தங்கள் சுமைகளை இறக்கி விட்டு முன்னே வந்து பார்த்தார்கள்.

குப்புறக் கிடந்த அந்தப் பிரேதம் இன்னும் நாற்றமடிக்க ஆரம்பித்திருக்க வில்லை. "ராத்திரி எவனும் குடிச்சிட்டு வந்து விழுந்திருப்பான். யாருன்னு பாருலே...உசிரு இருக்கான்னு பாரு" என்றான் இளைய பெருமாள்.

பார்த்தார்கள். அது ஒரு புதிய முகம். யாரென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. உள்ளூரென்றால் தெரியாமலிராது. இடுப்பில் அலங்கோலமாக ஒரு வேட்டி மட்டும். மற்றப்படி திறந்த மேனியாகக் கிடந்த அந்த மனிதன் யார்? எதற்காக இங்கு வந்தான்? அவர்களால் அனுமானிக்க முடியவில்லை.

அதற்கிடையில் பொழுது விடிந்துவிட கூட்டம் கூடியது. போலீசுக்குச் சொல்ல ஓடினார்கள் சிலர். மீதியைப் போலீஸ் கவனித்துக் கொள்ளும்.

இதற்கிடையே கூடியிருந்த கூட்டத்தில் ஆரம்பித்த உரையாடல்
"இந்த வளவுல இது மூணாவது சம்பவம்." ஒருவன் ஆரம்பித்து வைக்க "ஆமால்லா! இது அந்த லெச்சிக்க வேலதான்" இன்னும் நடுக்கம் தீராத செல்வராசு பேசினான்..
(வளரும்)

1:08:00 AM

தனிப்பதிவு | மதிப்பிடுக: - தமிழ்மணம் | * |


*


Anonymous Anonymous கூறுவது...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்


 

Post a Comment

மறுமொழி இடுக!

PDF

கருகிய கனவுகள்

*காணும் காட்சியெல்லாம்
கேட்கும் செய்தியெல்லாம்
படிக்கும் இதழ்களெல்லாம்
தினந்தோறும் விபத்துகள்,
கொலை, கொள்ளை,
தீவிரவாதம்
மரணங்கள் மரணங்கள் மரணங்கள்
கேட்டுக் கேட்டு பார்த்துப் பார்த்து
மரத்துப் போனது மனசு

பட்டமரம் துளிர்க்குமா
மரத்துப்போன மனதில் கலக்கமா
கலங்கியது நெஞ்சம்
காணாத காட்சிகண்டு

குருத்துகள் சருகாகலாம்
வீணையும் விறகாகலாம்
மழலைகள் மரக்கரியாகுமா...

கண்முன்னில் காட்சியான
கரிமக் கவிதைகள்
வாழும்நாள் வரை வரைவின்மாறாத
வடுக்களாய் நெஞ்சில்

விழிகளில் விழுந்த துளிகள்
மாயுமா இல்லை காயுமா
இதயத்தில் கசிந்த காரம்
குறையுமா இனி மறையுமா

ஆறுதல் தேறுதல் எத்தனை நேரினும்
காலம் ஆற்றும் காயமா
எழுதும் மையிலும்
கண்ணீரின் கலக்கம்

நெருப்பிற்கோ நெஞ்சமில்லை
அறிந்திருந்தும் தெரிந்திருந்தும்
ஆபத்தில் கைவிட்டு
அழிவிற்குள் செலுத்திய அறிவோர்

படிப்பதற்கு சென்ற பிள்ளை
நொடிப்பொழுதில் இன்று இல்லை
பார்வையாளர் பரிதவிப்பே இதுவெனில்
பாசப் பெற்றோர் படும்பாட்டை என்சொல

ஒன்றல்ல இரண்டல்ல
ஒருநூறு ஒருசேர
மாண்டு மரப்பாய்ச்சி போல் காண
*வேண்டும் கல்நெஞ்சம்!

(20-07-04 அன்று எழுதியது)

10:41:00 AM

தனிப்பதிவு | மதிப்பிடுக: - தமிழ்மணம் | * |


*

Post a Comment

மறுமொழி இடுக!

PDF

கும்பகோணக் குறும்பாக்கள்

*
நெஞ்சு பதறிய
நாளிதழ் செய்தி
ஜூலை 16, கும்பகோணம்...

*
மகாமக மரண
கும்பகோணத்தில்
மகா மரணங்கள்!

*
நெருப்புக்குப் பசித்தது
புசித்தது
பசித்திருந்த பாலகர்களை.

*
உலையில் வேகும்
உணவு
வெந்தது உடம்பு

*
சூரியனில் கூட
அமாவாசை
பூமியில் கருகிய மழலைகள்.

*
பள்ளிக்குப் போனது பிள்ளை
திரும்பி வந்தது
மரப்பாய்ச்சி பொம்மை

*
பாடசாலை ஆலயமாம்
தெய்வமாயின
பிஞ்சுப் பிள்ளைகள்.


10:48:00 AM

தனிப்பதிவு | மதிப்பிடுக: - தமிழ்மணம் | * |


*

Post a Comment

மறுமொழி இடுக!

PDF

பெயரில் என்ன இருக்கிறது


ஆரோக்கியமில்லாத ஆரோக்கியசாமி
பார்வைக்குறைவுள்ள கண்ணாயிரம்
அவலட்சணமான அழகரசி
அசட்டுத்தனமான மதியழகன்
சின்னவயசில் செத்துப்போன சிரஞ்சீவி
பாவாடை என்றபெயரில் ஆம்பிள
படிக்காதவன் பேரு அறிவானந்தம்
சோகத்திலேயே வாழும் ஆனந்தன்
முரட்டுமனிதன் அன்பு
பெரியமனிதர் சின்னத்தம்பி
ஊமைப்பெண் தேன்மொழி


பெயர்களில் இத்தனை
முரண்பாடுகள்
முரணில்லா முகவரி தேடி
முரணுடன் நானும்...


பெயரில் என்ன இருக்கிறது
எதேதோ இருப்பதாய்
பெயரியல் நிபுணர்கள்
தெருவுக்கு நாலுபேர்...


அண்ணா, பெரியார்
என்பதுபோலப்
பெயர்களே இல்லாத
பெயர்களும் பேசப்படுகின்றன
பேசப்படாத பெயர்கள்
பெயர்களாயிருந்தென்ன...


அடையாளங்கள் சிலசமயம்
பெயர்களாவதுண்டு
கோடிவீட்டு வாத்தியார்
மாடிவீட்டு சேட்டு
என்பதுபோல
மூக்கன், கறுப்பன்
பெயர்களா அடையாளங்களா?



12:54:00 PM

தனிப்பதிவு | மதிப்பிடுக: - தமிழ்மணம் | * |


*


Blogger :: விமல் :: கூறுவது...

நல்ல விடயமே . . .

 

Post a Comment

மறுமொழி இடுக!


Free stats

© வலைஞன் 2005 - Powered for Blogger by Blogger Templates